‘உலக தண்ணீர் தினம்..’ – தண்ணீரை காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ..

by Lifestyle Editor

உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஓட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், “உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதை அளவிற்கு முக்கியமானது தண்ணீர். இப்போது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாதது. அதனால்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் ஐயன் வள்ளுவன். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாடுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ‘நிலம் நீர் வழி வசம்போடு- ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்கிறது. தண்ணீர் என்று சொல்லாமல் ‘அமுதம்’ என்றவர் திருவள்ளுவர்.

Related Posts

Leave a Comment