விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

by Lifestyle Editor

விவசாய சங்கங்களினால் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்தே குறித்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த வாரத்தில் இருந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment