உளுந்தங்கஞ்சி ரெசிபி.!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 1 கப்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

துருவிய வெல்லம் -1 கப்

தேங்காய்ப் பால் – 1 கப்

துருவிய தேங்காய் – அரை மூடி

நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்

சுக்கு பொடி – 1/4 ஸ்பூன்

செய்முறை :

முதலில் உளுந்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

இரண்டும் நன்கு உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்துவைக்கப்பட்ட உளுந்து மற்றும் வெந்தயத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஊற்றிக்கொள்ளவும்.

பிறகு அதில் நுணுக்கிய ஏலக்காய், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

அடுத்து அதில் 2 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து 15 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

கஞ்சி தயாராகியவுடன் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்த்து இறக்கினால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.

Related Posts

Leave a Comment