பிரதீப் பற்றிய கேள்வியால் பதறிப்போன பூர்ணிமா…அதற்கு அவங்க சொன்ன பதில் இருக்கே..

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டி உடன் வெளியேறிய பூர்ணிமா, பிரதீப் ஆண்டனி குறித்த கேள்விக்கு அளித்த பதில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிவாரத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் பைனலுக்கு மணிச்சந்திரா, விஷ்ணு விஜய், மாயா, அர்ச்சனா, தினேஷ், விஜய் வர்மா ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள். அது யார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரூ,16 லட்சம் பணப்பெட்டி உடன் பூர்ணிமா வெளியேறினார். பிக்பாஸ் வரலாற்றில் அதிகபட்ச தொகையுடன் வெளியேறியுள்ள போட்டியாளரும் இவர் தான். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் டைட்டில் ஜெயித்த அளவுக்கு அவருக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமின்றி பணப்பெட்டி உடன் கமல்ஹாசனுடனும் பூர்ணிமா உரையாடிவிட்டு சென்றார்.

அப்போது வரவேற்பு எப்படி இருக்கிறது என கமல் கேட்டதற்கு, தன்னை மக்கள் கொண்டாடுவதாகவும், எங்கு சென்றாலும் தன்னை பீனிக்ஸ் பூர்ணிமா என அழைப்பதாகவும் பில்டப் கொடுத்து பேசி இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படியா வாய்கூசாமல் பொய் சொல்வது என பூர்ணிமாவை கிண்டலடித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது பிரதீப் ரசிகர்களிடம் சிக்கி அவர்கள் கேட்ட கேள்வியால் பூர்ணிமா வாயடைத்துப் போன சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

பிக்பாஸுக்கு பின்னர் தனியார் ரேடியோ நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பூர்ணிமா. அப்போது அவரிடம் கடந்த 2 நாட்களாக பிரதீப்புக்கு பூர்ணிமா என்ன பதில் சொல்ல போகிறார் என்கிற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பூர்ணிமா, நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாள் எல்லாருக்கும் என்னை புரியும். அப்போ எல்லாமே எல்லாருக்கும் புரியும். அத்தனைக்கும் பிறகு ஒரு பூ பூக்கும்” என மழுப்பலான பதிலைக்கூறி இருக்கிறார் பூர்ணிமா.

Related Posts

Leave a Comment