அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

by Lifestyle Editor

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா்.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 இலட்சம் (இந்திய ரூபா) சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்னிலையில் இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment