கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 298 பேருக்கு கொரோனா

by Column Editor

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் கந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவை போலவே தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதிகபட்சமாக சென்னை 18, கோவை 7, திருவாரூர், திருவள்ளூர் தலா 4, குமரியில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment