சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

by Lifestyle Editor

இதய நலன் மேம்படும் :

நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம். வெறுமனே அவித்து, தோல் உரித்த கிழங்கின் மீது எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.

கொலஸ்ட்ரால் குறையும் :

கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து வகைகள் இந்த கிழங்கில் தாராளமாக உள்ளன. நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மீது இது பிணைந்துக் கொண்டு, அதை வெளியேற்ற உதவியாக இருக்கும். இதனால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறையும். அதிலும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உது மிகவும் உதவியாக அமையும்.

பொட்டாசியம் சத்து :

நம் இதய நலனை மேம்படுத்துவதிலும், ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதிலும் பொட்டாசியத்தின் பங்கு முக்கியமானதாகும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்டென்சனுக்கு காரணமான சோடியத்தின் செயல்பாடுகளை பொட்டாசியம் கட்டுப்படுத்தும்.

ரத்த நாளங்கள் பாதுகாக்கப்படும் :

இந்த கிழங்கில் வைட்டமின் சத்து நிறைவாக இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் சி சத்து தாராளமாக கிடைக்கும். அத்துடன் ரத்த நாள பாதிப்புகளை தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்களும் இதில் கிடைக்கும். இதய நோயால் பாதிக்கப்படும் மக்கள் வாரம் ஒருமுறையாவது சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிட்டு வரலாம்.

பீடா கரோடின் :

ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோடின் சத்து மிகுதியாக உள்ளது. இது நம் உடலில் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவும். இதேபோன்ற பீட்டா கரோடின் சத்து கேரட்டிலும் கிடைக்கிறது.

அழற்சிக்கு எதிரான பண்புகள் :

நீடித்த அழற்சி காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளன. இதனால் நம் உடலில் அழற்சி குறையும்.

குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ் :

உருளைக் கிழங்குகளை ஒப்பிடுகையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாகும். ஆகையால் இது நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக ரத்த சர்க்கரை அளவால் இதயநலன் மோசமடையக் கூடும்.

Related Posts

Leave a Comment