செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது திருமண தடை நீங்கும்..!

by Lifestyle Editor

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதில் 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

செவ்வாய்க்கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். அந்த நாளில் துர்க்கை அம்மனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாவது உறுதி என்பது ஐதீகம்.

செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் வணங்க வேண்டும்.

துர்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் துர்கை பூஜைக்கு உகந்தவையே. மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் துர்கையை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.

ராகுதோஷ நிவர்த்திக்காக துர்கை அம்மனுக்குரிய மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அம்மன். அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும். அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

விளக்கேற்றும் முறை

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகள் தீர, ஞாயிறு மாலை 4.30 – 6.00 மணிக்குள் ராகு கால வேளையில், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதில் 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகதான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை

இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 கோயிலில் நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்க வேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், எங்கும் நிற்கக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.

வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையு ம்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.செவ்வாய் கிழமை ராகு கால பூஜை பலன்:

செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரும் ராகு காலத்தில் விரதமிருந்து ராகுகால பூஜை செய்துவர பித்ரு தோஷம் மற்றும் திருமண தோஷம் நீங்கி நல்ல பலன் உண்டாகும். உடனே திருமணம் நிச்சமாகும். குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related Posts

Leave a Comment