மகாசிவராத்திரி தினத்தில் பூஜை எப்படி செய்ய வேண்டும்..

by Lifestyle Editor

மகாசிவராத்திரி வரும் 8ஆம் தேதி வரவுள்ள நிலையில் அன்றைய தினம் பூஜை அறையில் விளக்கேற்றி, விரதத்தை தொடங்கவும். பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும். பூக்கள், பழங்கள், தேங்காய், நைவேத்தியம் போன்றவை வைத்து சிவனை வழிபடவும். மேலும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை ஜபிக்கவும்.

மாலை மற்றும் இரவு மீண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்யவும். மகா சிவராத்திரி விரத கதை மற்றும் சிவ புராணம் போன்ற புத்தகங்களை படிக்கவும். ஓம் நமசிவாய” மந்திரத்தை ஜபித்து, சிவனின் திருநாமங்களை சொல்லி வழிபடவும்.

இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட விரும்பினால், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை பூஜை செய்யவும். கண்விழிக்க முடியாதவர்கள், தங்களால் முடிந்தவரை இரவில் சிவனை வழிபடலாம்.

பூஜை செய்யும் போது, தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ளவும். பூஜை செய்யும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும். பூஜைக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளவும். மனம் ஒருநிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

மகா சிவராத்திரி இரவில் கண்விழித்து சிவனை வழிபட்டால், பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் அருளைப் பெற்று, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். மன அமைதி மற்றும் ஆன்மிக ஞானம் பெற உதவும்.

Related Posts

Leave a Comment