மதியம் 1 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

by Lifestyle Editor

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும். உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு ,விழுப்புரம் ,திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment