அடுத்த இரண்டு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் …

by Lifestyle Editor

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

திருநெல்வேலி ,தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் ஓர் இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் , நாளை நாளை மறுதினம் புதுச்சேரி , தமிழ்நாடு காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment