இந்தியா Vs நியூசிலாந்து அரையிறுதி: கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம்

by Lifestyle Editor

உலக கோப்பை ஒருநாள் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டி இன்று மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில்தான் இலங்கை அணியை இந்திய அணி 55 ரன்களில் ஆல் அவுட் செய்தது. இந்த மைதானத்தில் உள்ள இரண்டு பிட்ச்களில் ஒரு பிட்ச் லீக் ஆட்டங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பயன்படுத்தாத பிட்ச்சை இன்று பயன்படுத்தி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கடைசி நேரத்தில் ஏற்கனவே லீக் போட்டிகள் நடந்த பிட்ச்சிலேயே போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment