இந்தியா – இலங்கை அணிகள் மோதல் ..!

by Lifestyle Editor

மும்பையில் இன்று நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33வது போட்டி வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய போன்ற அணிக்கு எதிராக மகேஷ் தீக்ஷன உட்பட இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அவசியமாக இருந்தாலும் இதுவரை உலகக் கிண்ண போட்டியில் அவர்கள் பெரிதாக பிரகாசிக்கவில்லை.

இதேவேளை லக்னோவில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய 11 பேர் கொண்ட அணியில் இந்தியா எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மகேஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment