9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Lankan Editor

நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுக்கும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 9 மாவட்டங்களில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment