வைகாசி மாதத்தின் சிறப்புகள் …

by Lifestyle Editor

வளம் தரும் வைகாசி மாதத்தை ’மாதவ மாதம்’ என்றும் வைகாசம் என்றும் போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹா விஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

சித்திரை முடிந்து வைகாசி மாதம் ஆரம்பிக்கும் பொழுது வணங்க வேண்டிய தெய்வமாக குலதெய்வம் உள்ளது. குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் என்பது நம்பிக்கை.

வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

1. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.

2. வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

3. கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே ஆகும்.

4. வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி.

6. காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.

7. வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களால் ஆன மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

8. வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைபிடிக்கப்படும் விரதம் ரிஷப விரதம் ஆகும்.

9. வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீவாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

10. தமிழ் கடவுள் முருகன் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார்.

11. வைகாசி மாதத்தில் 63 நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், கழற்சிங்கர், சோமாசி மாறன், நமிநந்தி அடிகள், திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர் ஆகியோர் பிறந்துள்ளனர்.

12.சிவபெருமான் பார்வதி திருமணமும், முருகப்பெருமான் தெய்வானை திருமணமும் நடைபெற்ற மாதம் வைகாசி ஆகும். இந்தத் தினம் புண்ணிய தினமாகும்.

வைகாசி மாத வழிபாட்டின் பயன்கள் :

1. இந்த வைகாசி மாதத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள ஆயுள், செல்வம், புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

2. வைகாசியில் வைகுந்தனை நினைத்தாலும் சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.

3. வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நிராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் பல நன்மைகள் நடக்கும்.

Related Posts

Leave a Comment