கோயில்களில் வழிபாடு செய்த பின் ஏன் சுற்றி வருகிறோம் தெரியுமா..

by Lifestyle Editor

கோயில்களில் செய்ய வேண்டியவை..

1. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.

2. ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும்.

3. பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.

4. கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும்.

5. இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

6. பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.

7. அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசி உடன் இறைவனின் பெயரை உச்சரித்தபடி கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். குறிப்பாக (விருப்பம் இருந்தால்) விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும். அதுவே நியதி. அதே போல, உங்களுக்கு விருப்பம் இருந்தால் சுவாமி உண்டியலில் காசு போடலாம்.

8. முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும்.

9. இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும்.

10. மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

11. சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு செய்தால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து வேண்டியதை தருவார்கள் என்பது ஐதீகம்.

12. மேலும் கடவுளை வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக சிற்றி பிரதிஷ்டை செய்வதும், அங்கபிரதட்சணம் செய்து வழிபடுவதும் இந்தியாவில் பரவலாக இருக்கும் ஒரு வழிபாட்டு முறையாகும்.

13. அப்படி கோயிலை சிற்றி வ்பரும் போது கடவுள் நம்முடைய வலது பக்கத்திலேயே இருப்பார். இந்தியாவில் வலது புறம் என்பது புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே நாம் வலது புறமாக சன்னிதியை சுற்றிவரும்போது நாம் தர்மத்தின் பக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வலதுபுறம் சுற்றுவது நமது பலமாக இறைவன் நமது பக்கத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தும்.

14. கோவிலுக்கு சென்றால் ஆலயங்களில் முக்கியப் பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது. கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது புண்ணிய காரியமாக கருதப்படுகிறது.

15. முடிந்தால் சனிக் கிழமையில் கோயில் தீபங்களுக்கு நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள். இதனால் சனி தோஷம் அகலும்.

16. சிவன் கோவிலில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும்.

17. விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும். அதுவே ஆகம விதி.

18. ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள். எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப் பயனையும் பெற முடியும்.

ஆலயங்கள் செல்லும் சமயத்தில் செய்யக் கூடாதவை என்று பார்த்தால்…

1. கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்ற இவற்றை மனதில் சுமந்த படி ஆலயம் செல்லுதல் பாவம்.

2. குளித்து, தூய உடை அணியாமல் செல்லுதல் பாவம்.

3. நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது.

4. சுவாமி சந்நிதிகளை… அவசர, அவசரமாக வலம் வருதல் கூடாது.

5. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. அது மகா பாவம்.

6. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது

7. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ மூலவ, ரூபங்களை வாய்ப்புக கிடைத்தால் தொடுதல் அல்லது மிதித்தல் கூடாது.

8. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.

9. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

10. சுவாமி சிலைகளைத் தொடுவதோ அல்லது நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.

11. . கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணெய் கறையை சுவரில் துடைக்கவோ கூடாது.

12. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. காரணம் அங்கு இறைவன் ஒருவரே மகா பெரியவர்.

13. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். எந்த ஒரு வெளியூர் ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.

14. ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.

15. காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Related Posts

Leave a Comment