தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது ..

by Lifestyle Editor

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி விடைத்தாள் திருத்துவது மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் பணிகள் முடிவடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 79 மையங்களில் , ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் விடித்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 8 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும், உயர் கல்வியில் பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் போன்ற சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14,417 என்ற உதவி எண்ணுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதில் அளிப்பார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மதிப்பெண்களை நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், மாணவர்கள் குறிக்கோளை நிறைவேற்ற இந்த உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment