கீரை சாதம்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

முளைக்கீரை – ஒரு கட்டு,
பாசுமதி அரிசி – 200 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு,
பூண்டு – 2 பல்,
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
காய்ந்த மிளகாய் – 2,
நெய் – 50 கிராம்,
தனியா – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து… பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும்.
சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சூப்பரான சத்தான கீரை சாதம் ரெடி.

Related Posts

Leave a Comment