மும்பை அணிக்கு எதிரான போட்டி – சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு ..

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது.

சென்னை அணி :

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா உள்ளிட்டோர் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி :

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான் உள்ளிட்டோர் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts

Leave a Comment