இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது …

by Lifestyle Editor

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 51,314-ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,31,508 – ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment