இந்தியாவில் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் கொரோனா – சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!!

by Column Editor

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று 7ஆயிரத்தை தாண்டிய கொரோனா, இன்று மீண்டும் 6ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 6,915 பேர், நேற்று 7,554 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி பாதிப்பு இன்று உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 223 பேர் பலியான நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,14 ,338 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து குணமானவர்களின் 14,947 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,33,99,620 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77,152 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment