பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்ப விசேட பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் ..

by Lifestyle Editor

புத்தாண்டை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்கு இன்று முதல் சில விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் விசேட பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிபிரதேசங்களுக்கு செல்வதற்காகவும், பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment