நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

by Lifestyle Editor

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று முன் தினம் 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment