முருக பெருமானின் படைவீடும்… வணங்குவதால் கிடைக்கும் பலன்களும் ..

by Lifestyle Editor

முதல்படை வீடு: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருப்பரங்குன்றம் ஆலயத்தில் வழிபாடு செய்தால். திருமணம் கைகூடும்.

இரண்டாம் படைவீடு: கடற்கரையோரமாக அமைந்த திருச்செந்தூரில் கடலில் நீராடி சுப்பிரமணியரை வழிபட்டால் நோய், பகை நீங்கும்.

மூன்றாம் படைவீடு: முருகப்பெருமான் ஆண்டியாக நின்ற பழனி மலைக்கு சென்று வழிபாடு செய்தால், தெளிந்த ஞானத்தைப் பெறலாம்.

நான்காம் படைவீடு: சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை முருகப்பெருமான் கூறிய இடம் சுவாமிமலை. இங்குள்ள முருகனை வழிபட்டால், மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

ஐந்தாவது படைவீடு: சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தன்னுடைய கோபம் தணிவதற்காக முருகப்பெருமான் வந்து அமர்ந்த இடம், திருத்தணி. இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு கோபம் நீங்கி, வாழ்வு சிறக்கும்.

ஆறாவது படைவீடு: முருகப்பெருமான் தன்னுடைய திருவிளை யாடலை, அவ்வையிடம் காட்டிய இடம் பழமுதிர் சோலை. இங்கு வழிபட்டால் பொன், பொருள் சேரும்.

Related Posts

Leave a Comment