சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

by Lifestyle Editor

சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, சென்னை வந்திருக்கிறார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்திருக்கிறார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி ரூ. 5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Related Posts

Leave a Comment