தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு ..

by Lifestyle Editor

மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 ஆம் தேதி லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்

மார்ச் 22 ஆம் நாள் கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகபட்சமாகச் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெருங்குடி பகுதியில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Posts

Leave a Comment