திருமந்திரம் – பாடல் 1690 : ஆறாம் தந்திரம் – 14

by Lifestyle Editor

பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார் நல்வழி யறிவாள
ரழி வறிவார் மற்றையல்லா தவரே.

விளக்கம்:

இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் போது, இறையருள் ஒரு குற்றமும் அறியாத புனிதமான இறை நிலையை அடைந்த குருவை அவருக்கு காட்டி அருளும். அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்து கொண்டவர்களே நல்ல வழியை அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.

Related Posts

Leave a Comment