இரண்டாவது நாளாக 3,000ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு ..

by Lifestyle Editor

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 2,151 ஆக பதிவாகியிருந்த கொரோனா பாதிப்பு நேற்று 3 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,208- ஆக உயரந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உள்ளது.

Related Posts

Leave a Comment