பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி …

by Lifestyle Editor

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளைச்சாவு அடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக தெரிகிறது.

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுயநினைவை இழந்ததாக தெரிவித்துள்ளனர். பரிசோதனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கர்சிவு இருப்பது தெரியவந்தது.

மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். மிகவும் கவலைக்கிடமாக உள்ள அவரது நிலைமை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment