விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!!

by Lifestyle Editor

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர் .

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்த தம்பதி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு தாக்கல் செய்துள்ளனர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Posts

Leave a Comment