தினம் ஒரு திருமந்திரம் – பாடல்1682: ஆறாம் தந்திரம் – 13.

by Lifestyle Editor

அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளொ
ருவூனிலை செய்யு முருவிலி தானே.

விளக்கம் :

ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து வருகின்ற இனிமையான பால் ஊறுகின்ற தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். தமக்கு உள்ளே இருக்கின்ற ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாக பிடித்து வைத்து இருக்கின்றது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.

கருத்து :

இயல்பான அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாங்கள் குழந்தையாக இருக்கின்ற போது கிடைத்த முதல் உணவான பாலில் இருந்து தமக்குள் இயங்குகின்ற அனைத்தும் தமக்குள் இருக்கின்ற இறைவனே செய்கின்றான் என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

Related Posts

Leave a Comment