கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது ..

by Lifestyle Editor

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான பால் சர்பத் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் – அரை லிட்டர்.

பாதாம் பிசின் – 5 துண்டுகள்.

பாதாம் பருப்பு – 15.

சர்க்கரை – 10 ஸ்பூன்.

ஆப்பிள் – 1.

ஸ்ட்ராபெரி – 4.

ஏலக்காய் – 3.

செய்முறை :

பாதாம் பால் சர்பத் செய்ய, முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கோப்பையில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, சர்பத் அவ்வளவு நன்றாக இருக்கும்.

சர்பத் செய்ய, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கோப்பை தண்ணீரை சூடு படுத்திக்கொள்ளவும்.

சிறய பாத்திரத்தில் வைத்த தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற விடுங்கள். 10 நிமிடங்களுக்கு பின்னர் இந்த பருப்பினை தனியே எடுக்க பருப்பின் தோல் நீங்கி தனியே வரும்.

தோல் நீக்கிய இந்த பாதாம் பருப்பினை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு சற்று திப்பை திப்பையாக இருக்க வேண்டும்.

இதனிடையே பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, பாலில் சர்க்கரை சேர்த்துக் கலக்கிவிடவும். பின்னர் இந்த பால் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டில் 30 நிமிடங்களுக்கு வைத்து குளிர்ச்சியூட்ட வேண்டும்.

பின்னர் ஒரு கோப்பையில்., ஊற வைத்த பாதாம் பிசின், குளிரூட்டப்பட்ட பால் மற்றும் அரைத்து எடுக்கப்பட்ட பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி எடுக்க பாதாம் பால் சர்பத் ரெடி!

கோப்பையில் ஊற்றி வைத்துள்ள இந்த பாதாம் பால் சர்பத்தின் மீது, பொடியாக நறுக்கப்பட்ட ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் உங்களுக்கு விருப்பமான மேலும் பல பழங்களை சேர்த்து பரிமாறலாம்.

Related Posts

Leave a Comment