ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

by Lankan Editor

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் காமினி வலேபொட தெரிவித்தார்.

கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்டுக்கொண்டார்.

Related Posts

Leave a Comment