ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம்..

by Lifestyle Editor

ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அரிவித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது உள்ளிட்ட இந்த 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 12ம் தேதி, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் ஜன. 30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார். அதன்படி வேலைநிறுத்தம் காரணமாக இந்த மாத ஜன 30 ( திங்கள்), 31( செவ்வாய் கிழமை) ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது. முன்னதாக 4வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலை நிறுத்தம் என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment