வங்கக்கடலில் உருவானது புயல்..!

by Lifestyle Editor

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கும் நிலையில் இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் அதன் பிறகு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புயலுக்கு மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றும் இந்த புயல் தமிழ்நாட்டின் ஊடாக செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்படும் என்றும் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வருமா அல்லது ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை நோக்கி செல்லுமா என்பது இன்னும் இரண்டு நாளில் துல்லியமாக தெரிந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Comment