திருமந்திரம் – பாடல் 1622 : ஆறாம் தந்திரம் – 4

by Lifestyle Editor

துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அகன்றார் வழிமுத லாதிப் பிரானு
மிவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகு
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்த கணம் முதலே ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் இந்த துறவியே தாம் தான் என்று துறவியாகவே நின்றாலும் ஜீவாத்மா போன்ற எளியவன் இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்த பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி தாமே வருகின்ற வழி முறையை நாம் அறிவது இல்லை.

கருத்து:

அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றாலும் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற உயிர்களுக்குள் இறைவன் தமது பரமாத்ம நிலையிலியே விருப்பத்தோடு வந்து வீற்றிருக்கின்றான்.

Related Posts

Leave a Comment