’எப்படியாவது எடையை குறைக்கணும்’; மருந்து எடுத்த இளைஞர் பலி ..

by Lifestyle Editor

காஞ்சிபுரத்தில் உடல் எடையை குறைப்பதற்காக மருந்து சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் புத்தாண்டு சமயங்களில் இளைஞர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கவும், ஃபிட் ஆக வைக்கவும் விரும்பி ஜிம் உள்ளிட்டவற்றில் சேர்வது வாடிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் சூர்யாவும் தனது உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார்.

இதற்காக சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை எடை குறைப்பதற்காக அணுகியுள்ளார். அவர்கள் சில மருந்துகளை அளித்து தினம்தோறும் சாப்பிட சொல்லியுள்ளனர். அதன்படி சூர்யாவும் சாப்பிட்டு வர சில தினங்களில் வேகமாக எடை குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு சூர்யாவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது. நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பிற்கு தனியார் நிறுவனம் கொடுத்த மருந்தே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை குறைக்க விரும்பி மருந்து சாப்பிட்ட இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment