பள்ளி மாணவியை கடத்தி போதை ஊசி போட்டு 5 இளைஞர்கள் தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை

by Lifestyle Editor

போதைப் பொருள் கொடுத்து 13 வயது ஒன்பதாம் வகுப்பு மாணவியை 4 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிர வைத்தது. சென்னையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து மதுரையிலும் ஒரு மாணவிக்கு இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது . போதை ஊசி செலுத்தி செலுத்தி 17 வயது பள்ளி மாணவியை ஐந்து இளைஞர்கள் தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள். இதனால் அம்மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் வேலூர் அடுத்த தும்பைப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சபரி. இத் தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகளும் ,ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகள் மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

மாணவி வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய மகன் நாகூர் அனிபா(26). இந்த இளைஞருடன் அம்மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது . அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் மாணவியை அழைத்துச் சென்றிருக்கிறார் நாகூர் அனிபா. நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்போகிறார் நாகூர் அனிபா என்பதை அறியாத அந்த மாணவி அவருடன் சென்றிருக்கிறார்.

அதன் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த மாணவிக்கு போதை ஊசி செலுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக அந்த மாணவியை கடத்திச் சென்ற நாகூர் அனிபா, நண்பர்களுடன் சேர்ந்து பல நாட்களாக இப்படி போதை ஊசி போட்டு போட்டு அந்த சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்திருக்கிறார் . இதனால் அம்மாணவி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நாகூர் அனிபா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் மாணவிக்கு போதை ஊசி செலுத்தி தொடர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் கொதித்தெழுந்த மாணவியின் தாய் சபரி, வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்க, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் நாகூர் அனிபா மீது வழக்குப்பதிவு செய்து, நாகூர் ஹனிபாவை தேடிவருகின்றனர். நாகூர் அனிபா மூலம் மற்ற இளைஞர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment