பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி – 3/4 கப்
அரிசி மாவு – 1/2 கப்
கடலை மாவு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பன்னீர் – 1/4 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1 உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். பன்னீரை துருவிக்கொள்ளவும். ஒரு பௌலில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment