அரியலூரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் .

by Lifestyle Editor

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை வியாழக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியர் அவர்களிடம் நேடியாக மனுக்களை வழங்கி பயனடையுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment