பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சினை …கோபத்தில் பொங்கிய ஏடிகே !

by Lifestyle Editor

போட்டியாளர்களுக்கு இடையே சண்டை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்களைக் கொண்டு வெகு விமர்சையாக அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கலந்துக் கொண்ட பிரபலங்களில் இது வரையில் குறைவாக வாக்குகள் பெற்று 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அசீம் நடந்துக் கொள்ளும் விதம் பிடிக்கவில்லையென்றும், அவருடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கமாட்டேன் என்றும் கடந்த வாரம் விக்ரமனிடம் கூறியிருந்தார் ஏடிகே.

இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அசீமை சீன் கிரியேட் செய்யாமல் உன் வேலையை பாரு என கடுமையாக கூறியுள்ளார்.

மேலும் சிவினை சிரிக்க வேண்டாம் என்றும், மீறி சிரித்தால் அசிங்கமாக கேட்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஏடிகே இவ்வாறு நடந்துக் கொள்வதால் பரபரப்பும் அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment