திருமந்திரம் – பாடல் 1598 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல நீக்குந்
திருவடி ஞானந் திண்சித்தி முத்தியே.

விளக்கம்:

இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே சிவமாகவே ஆக்கி விடும். அதுவே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மை கொண்டு சேர்க்கும். அதுவே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய மலங்களை நீக்கி விடும். அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாக கிடைத்து விடும்.

Related Posts

Leave a Comment