மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை – வழக்கம் போல் இயங்கும் …

by Lifestyle Editor

மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment