திருமந்திரம் – பாடல் 1595 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.

விளக்கம்:

குருநாதராக வந்த இறைவன் பேச்சே இல்லாத இன்பத்தில் பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னை சிவமாகவே ஆகும் படி செய்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில் எம்மிடம் இருந்த மாயை அசுத்த மாயை சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டு இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல் அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி தனது திருவடிகளை தந்து அருளி என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்.

Related Posts

Leave a Comment