நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

by Column Editor

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாதத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து 511 நோயாளிகளும், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இடைக்கிடை மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment