‘வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை’ தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

by Column Editor

வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை அதே பகுதியில் வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 400 முதல் 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது . இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்களில் நகரக் கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை:-

இன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

8ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வருகிற 6 மற்றும் 7ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பல தமிழக மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும். இதனால் மீனவர்கள் பகுதிகளுக்கு வருகிற 6-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Related Posts

Leave a Comment