பயிற்சி விமானி மகிமா உயிரிழப்பு – முதலமைச்சர் இரங்கல்!

by Lifestyle Editor

தெலங்கானாவில் விமான விபத்தில் சிக்கி சென்னை பயிற்சி பெண் விமானி உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள துங்கதுர்த்தி கிராமத்தில் பயிற்சி விமானம் நேற்று விபத்துக்குள்ளாக்கியது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விமானப் பயிற்சி பள்ளியான Flytech Aviation Academy-க்கு சொந்தமான இந்த விமானம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மச்செர்லாவிலிருந்து புறப்பட்டுள்ளது.

பயிற்சி விமானம்அங்கிருந்த விவசாய விளைநிலத்தில் விபத்துக்குள்ளான நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நல்கொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த அந்த பெண் பயிற்சி விமானி சென்னையைச் சேர்ந்த மகிமா என்பது தெரிவந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகளில் விமானம் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment