250 கோடி வசூலைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் ‘புஷ்பா’… அடுத்த டார்கெட் 350 கோடி!?

by Column Editor

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா படத்தின் வசூல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியானது. ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் ஃபஹத் பாசில் புஷ்பா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் சந்தனக் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. புஷ்பா ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் தற்போதைய வசூலை தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் புஷ்பா திரைப்படம் இதுவரை 275 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ஜனவரி 6 வரை ₹325 கோடி முதல் ₹350 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

Related Posts

Leave a Comment