வடிவேலு நடிப்பில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… இன்று பூஜையுடன் துவக்கம்!

by Column Editor

வடிவேலு இயக்குனர் சுராஜ் உடன் கூட்டணி அமைக்கும் படத்திற்கு புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் கடைசி சில ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.

அதையடுத்து வடிவேலு தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் ‘நாய் சேகர்’ என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டனர். ஆனால் நாய் சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் வைத்துள்ளனர். எனவே படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

வடிவேலு பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு விழா நடைபெற்றது.

இன்று இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்குகிறது. சென்னையில் தற்போது படத்தின் பூஜை நடைபெற்று வருகிறது.படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment