ஜெய் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

by Column Editor
0 comment

நடிகை ஹனிரோஸ் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஹனி ரோஸ் மலையாளத்தில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் மலையாளப் படங்களில் தான் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் புதிய படத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளாராம்.

சைக்கோ திரில்லர் கதையான அந்தப் படத்தில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருபதாகக் கூறப்படுகிறது. பத்ரி இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படத்திற்கு பட்டாம்பூச்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment